Sunday, October 5, 2014

முதல் சந்திப்பு

உன்னை அறிய முற்பட்ட
பொழுதுகள் இனிமையானவை!

முதன் முதலாய்  உன்னை
பார்த்தது எப்போது? எங்கே?

என் நினைவு ஊஞ்சல்
பின்னோக்கி  நகர்கிறது

தனியறையில் மிக நெருக்கத்தில்
ஒரு பெண்ணொருத்தி  பகிர்ந்தாள்

உன் இருப்பை ! வேறு அடையாளங்களையோ
புகைப்படத்தையோ அவள் தரவில்லை.

காத்திருக்க வேண்டும் உன்னைக் காண
என்று மட்டுமே சொன்னாள்

நாட்கள்  பல உருண்டோடியது
என் ஆவல் கூடிக்கொண்டே போனது

நீ எப்படி இருப்பாய்! - உன்
ஸ்பரிசம்  எப்படி இருக்கும் என்று.

கூடவே முன் எப்போதுமில்லாதொரு பயம்
நீ  என்னை ஏற்பாயா?!

திடீரென்று  என் தொலைபேசி அலறியது
குறிப்பிட்ட முகவரிக்கு வரசொல்லிற்று.

அங்கு நீயும் அந்தப்  பெண்ணும்
ஒரே  கட்டிலில் !

உன்னை பிரசவித்த களைப்பில் என்
மனைவி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்.










No comments:

Post a Comment