Wednesday, October 29, 2014

யார் அவன்

என் ஜன்னலுக்கு வெளியே

பல நிகழ்வுகள்

காலை முதல் மாலை வரை

மாறும் காட்சிகள்

அந்த ஒரு விடுமுறை நாளில்

ஜன்னல் திறந்தே கிடந்தது

யாரும் அறியா வேளையில்

எவனோ ஒருவன்  பிரவேசித்தான்

நான் தான்  ராஜா  என்றான்

நீ தான் ராணி என்றான்

அவன் வேறு யாருமில்லை

அருகில் புதிதாய் குடிவந்த சிறுவன்

அன்று முதல் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.




No comments:

Post a Comment